Total Pageviews

Friday, June 24, 2011

தனிமையின் தாக்கம்..!


தனிமை என்பது.....
உன்னத உறவுகளில் உயிரிழக்கும் உரிமையா..??
இல்லை..
நம் வினோத விருப்பங்கள் விலகும் வினாடியா..??
தனிமையை உணர்வது..
இணையில்லா அன்பின் தாகத்தில்லா..??
துணையில்லா மனதின் ஏக்கத்தில்லா ..??
புரிந்த காதல் பிரிவதும்.. 
இந்த தனிமையில் தான்..!!
பிரிந்த காதல் புரிவதும்.. 
இந்த தனிமையில் தான்..!
தனிமையில் தவிக்காதே...!
தனிமையை தவிர்க்காதே..!
உன் பாதைக்கு மாற்றமாக வேண்டும்.. 
இந்த தனிமையின் தூரம்..!  
உன் உயர்வுக்கு ஊக்கமாக வேண்டும்..
இந்த தனிமையின் தாக்கம்..!

Tuesday, June 21, 2011

காதல் மடியில் மரணம்!!!


உணர்வுகளாய் என் உயிருடன் உருகினாயடி ..!
கனவுகளாய் என் கண்களில் கலந்தாயடி...!
நினைவுகளாய் என் நெஞ்சத்தில் நின்றாயடி..!
 
உணர்வென....என் உயர்வென கண்டேன்.....
உன்னை....
கனவென....என் காதலென கொண்டேன்..!
விழியென...என் வழியென கண்டேன்.....
உன்னை....
ஒளியென....என் மொழியென கொண்டேன்...!
உன் பாதங்களை துறந்தாலே...
என் பாதைகள் பழுதாக கண்டேன்...!
 
என்னவளே...
என் இமைகளில் துடிக்கும் இதயம் நீ..!
என் கற்பனைகள் தீண்டும் கவிதை நீ..!
என் காதல் செதுக்கும் சிற்பம் நீ..!
என் பாசம் பாதுக்காக்கும் பொக்கிஷம் நீ..!
 
காதலே..
உன் இதழில் இன்பங்கள் புதைப்பேன்..!
உன் வாழ்க்கையில் வெற்றிகளை விதைப்பேன்..!
ஆருயிரே..
உன் காதலில்  ஜனனம் உணருகிறேன்..!
உன் மடியில் என் மரணம் வேண்டுகிறேன்...!!!

 
 
 

Sunday, June 19, 2011

காதல் ---மொழிகள் ---!!!


அவள் தவறுகளை திருத்த அலைகளாய் என் காதல் சீறி செல்லும் !!
அவள் இன்பம் துறந்தால் என் கார்மேகங்கள் கண்ணீர் சிந்தும் !!
அவள் இமை மூடினால் என் வாழ்க்கை ஒளியின்றி இருண்டு விடும்!!
அவள் காதலை சொன்னால் என் மொட்டுகளான இன்பங்கள் பூத்து மனம் வீசும்!!
அவள் பாதம் தழுவினால் என் பாரங்கள் அவள் பாசத்தால் என்னை பிரியும்!!

காதல் தோட்டத்தில் பூத்த என் காதல் ரோஜாவே 
நம் இன்பத்தை... 
பிறர் பறிக்காமல் பார்த்து கொள்ள முட்களாவேன்!!
நீ துன்பத்தில் தவித்து  வாடாமல் இருக்க.. 
என் வியர்வையில் உன்னை  வளர்த்திடுவேன்!!   

கதிர் மூடும் மேகங்களை என் காதல் கலைத்து விடும்!!
உன் பூமிக்கு நான் இருளாத ஒளியோ??
என் காதலை விளக்கும் மொழியை கண்டறியவில்லை  இன்றும்!!
அன்பே காதலை உணரும் வழியோ??


Monday, June 13, 2011

என்ன‌வ‌ளின் பிறந்த‌ நாள்!!!


 பூக்க‌ள் ம‌ணம் மாறிய‌தோ??அன்று..
   என்ன‌வ‌ளின் ஸ்வாச‌ம் கொண்டு...
   உன் பாதைக‌ள் வான‌வில்லான‌தோ??இன்று..
   பாவையின் க‌ரு விழிப்பார்வையை க‌ண்டு...
   அழகே!!..
   நீ பிற‌ந்த‌ த‌ருண‌ம்!..
   மூன்றாம் பிறையும் முழுநில‌வான‌து!..
   உன் அழ‌கை க‌ண்டு...
   வெண்ணில‌வும் வெண்மை இழந்த‌து!..
   மின்ன‌ல்க‌ள் ஒளி வீசும்!..
   உன் வாழ்க்கை இருள் சூளாம‌ல் இருந்து விட‌!..
   விண்மீண்க‌ள் ஒளி விளக்குக‌ளாகும்!..
   உன் காற்றால் அனைந்து விட‌!..
   இன்று முத‌ல்!..
   உன் பாதைக‌ள் முழுவ‌தும்..
   புன்ன‌கை பூக்க‌ள் பூத்து ம‌ண‌ம் வீச‌..
   என் பிற‌ந்த‌நாள் ந‌ல்வாழ்த்துக‌ள்!..

Tuesday, June 7, 2011

என் மொத்தம் இழந்தேனே.. அவள் காதலில்..!

அந்த மேகங்களும் என்னுடன் காதலில் மறைகிறது !
அதில் நம் பிரிவின் கண்ணாடி உடைந்து சிதறுகிறது !
நம் கனவுகள் நிறைய வெண்ணிலவும் இருளில் ஒளிருகிறது !
நம் உணர்வுகள் ஊற அந்த கடலும் என் காதலில் மிதக்கிறது !
காதலே ..
நம் காதல் வானத்தில் மறையகூடாது வானவில்லான இன்பங்கள் !
இனி நம் புரிதல் பிரியத்தில் பிரிந்து பூக்காது  நம் புன்னகை பூக்கள் !
என் இதயத்தில் இடைவேளை இன்றி இன்பத்தை புதைத்தாயடி !
உன் காதலை மிச்சம் இன்றி நித்தம் உணர்ந்தேனே..!!
என் மொத்தம் உன்னிடம் இழந்தேனே !!
பிரிதல் பிழையில்லை பிரியமானவர்களின் பிரியத்தை பெருக்கினால்..!
காலத்தில் உயிரில்லை காமத்தை கடந்து காதலை துறந்தால்..!
காத்திருந்து ..காத்திருந்து .. காதல் கொள்கிறது இரு விழிகள்..!
இனி..
பிரிந்திருந்த நம் புரிதல்கள் பதிக்கும் நம் பாசத்தின் பாத சுவடுகள்!!
என் காதல் - பூக்கள் என்றால்.. 
அதல் இலைகள் தானாக உதிருமா..??
இல்லை.. 
உன்னால் பரிக்கபடுமா..??
என் மூச்சு காற்று.. உன் ஸ்வாச காற்றுடன் கலக்குமோ..?? 
இல்லை..
மரண காற்றில் மாயமாகுமோ..??

 

 

Thursday, June 2, 2011

THE REAL BEAUTY- வாழு..! வாழ விடு..!

இருளில் உதயமாகி உதவும் வெண்ணிலவும் அழகு தான் ..!  
இயலாத மனிதனுக்கு இயல்பாய் உதவும் கரங்களும் அழகு தான்..! 
 

 
ஊனத்தின் ஊக்கத்திற்கு உயிர்  தரும் மனித மனங்களும் அழகு தான் ..!
தீண்டாமையை தீயிட்டு அழிக்க உதவும் மனித தீப்பொறிகளும் அழகு தான் ..!
குழந்தையின் சிரிப்பிற்கு கோமாளியாய் உருவெடுக்கும் அன்னையின் காதலும் அழகு தான்..!
நம் இழப்பால் ஒருவர் கண்ணீர் சிந்தினால் நம் கல்லறையும் அழகு தான் ..!
பிறர் நலத்தை நாடினால் இந்த பூமிக்கு நம் நிழலும் அழகு தான் ..!
 நம் உழைப்பு சிலர் தேவைக்கு உதவினால் அவர்களின் வாழ்த்துகள் நம் மனதிற்கு அழகு தான்..! 

ஒரு மனிதன் தவறை உணர்ந்த பிறகு அவன் செய்த தவறுகளும் அழகு தான் ..!  
நாம் செய்யும் உதவிகளான மழைத்துளிகள் சிலதாக இருந்தாலும்.. 
அதன் பயனான மண் வாசனையை பலரும் உணர்ந்தால்  அழகு தான்..!  

 வறுமையும் அழகு தான் அதில் அன்பின்  வண்ணங்கள் நம் மனதில் கலையாத வரை..!
 மரணம் அழகு தான் நம் மனதில் அதன் எண்ணம் மறையாத வரை..!

அழகு என்பது நாம் நினைக்கும் வெளித்தோற்றத்தில் அல்ல ..!
பிறர் மனங்களில் நாம் உருவாக்கும் இனிய மாற்றங்களில் ..!!!!
அழகை பிறர் மனதில் விதைத்து நாம் காண வேண்டும் ..!
அந்த அழகிலே தான்  தெய்வங்கள் வாழ்வதை நம்மால் உணர முடியும் ..!
அந்த அழகின் வெண்ணிறம் மாறாது நம் மனதில்.. 
 அந்த அழகின் தோற்றம் வெளிப்படாது நம் விழிகளில் ..!!!! 

                  


            வாழு..! வாழ விடு..!
               
               
 CONTENT OF MY POEM TRANSLATED IN ENGLISH

The moon which portrays itself in darkness reveals the real beauty..!
Helping hands by nature for the persons incapable reveals real beauty..!
Hearts of persons serving as an encouragement factor for the disability reveals real beauty..!
Persons who help in lighting fire to Untouchability reveals real beauty..! 
Mother turning into a Clown to see her baby smile reveals real beauty..!
The Yelp of a person who feels our absence  makes even our funeral reveal real beauty..!
Caring for others make even our shadows in this soil to reveal real beauty..!
If our hard work serves the necessity of others  then our hearts reveal real beauty..!
If a man realises his mistakes then his wrong deeds also reveals real Beauty..!
We might help others with only few rain drops but the fragrance felt by more number of people due to that reveals real beauty..!
Being poor will reveal real beauty If love does not change its colours often..! 
Our death will reveal real beauty only when its thought does not fade away in our hearts..!
The Real beauty is not in External looks..!
It makes its presence in the lovely changes that we bring in the hearts of others...!
We have to see the real beauty by depicting it in others hearts..!
We can feel the presence of God only in such beauty..!
Purity of such beauty  will  never change in our hearts..!
The looks of such beauty can never be seen through our eyes..! ------ Koushik.R

I have written this post for Yahoo! India and Dove "I Believe in Real Beauty" under the topic "What does real beauty mean to me?"  Dont forget to visit http://realbeauty.yahoo.com/.
If you like my post, Do '' FB like" or you can vote for me on Indivine

                           LIVE AND LET LIVE..!