Total Pageviews

Wednesday, July 27, 2011

அன்னையின் அன்பில்..


அன்னையே..! 
உன் உணர்வுகளுக்கு வேலி போட்டு என் உயர்வை நாடி நின்றாயே..! 
உன் கனவுகளை கலைத்து விட்டு என் கண்ணீர் துடைக்க 
விரைந்தாயே..! 
உன் எண்ணமெல்லாம் என் நலம் கருதியே என... 
உன் குருதியில் உறுதி கொண்டாயே..! 
என் கனவுகள் கண்களில் இருக்க... 
அவற்றை உன் கரங்கள் வழியே என்னிடம் சேர்த்தாயே தாயே..! 
உன் நினைவுகளின் ஈரம் என் நெஞ்சினில் இருக்க.. 
என் இதயத்தில் மழையாய் மலர்கிறாயே..!
என் இதயம் இடப்பக்கம் இருக்க... 
உன்னிடம் இனைந்து இசைக்கிறதோ..?
என் பாதம் உன் பாசம் புரிந்து.. 
புவியினில் நகர்கிறதோ..??
என் கண்கள் கரையோர கண்ணீர் துளிகளை அணைக்க..
உன் அன்பலைகள் என்னுள் அலைகிறதோ..??
என் வேர்களில் சிந்திய உன் வேர்வை துளிகளின் ஈரத்திலே..
என் மனதில் மறைந்திருந்த மொட்டுகள் மொத்தம் மலர்ந்து மனம் வீசுமே..! 
தீப்பொறிகளாய் கோவமாய் சிதறும் உன் அன்பில்
என் தவறுகள் மொத்தம் அழியுதே..!
உன் மாற்றங்களுக்கேற்ப தண்ணீராய்..
என்னை உன்னுள் நிரப்பி நகர்வேன் --- என்றும்
உன் அகத்தின் ஆசைகளுக்கேற்ப.. 
உன்னை என்னுள் உணர்ந்து உயர்வேன்..!  







காதலின் தாக்கம்..!



உறக்கத்தில் அந்த நிலவும் என் தலையணை தழுவ கண்டேன்..! 
என் கண்கள் கடலில் அவள் கார்மேகங்கள் காதலில் மிதக்க கண்டேன்..! 
என் கனவில் நான் கண்ட வானவில்லா நீ..???
என் இருளில் நான் தேடிய முழுநிலவா நீ..???
உன் அன்பின் வாசத்திலே என் புன்னகை பூக்குமே..!
உன் காதலின் தாக்கத்திலே என் காயங்கள் மறையுமே..!
என் தோட்டத்தில் நீ முட்களாக இருந்தாலும் மலர்களாக.. 
என் மனம் அதை ஏற்று கொள்ளும்..! 
என் கண்களின் கண்ணீராய் நீ இருந்தாலும் கடவுளின் தீர்த்தமாக..
என் காதல் அதனை விரும்பி பருகும்...! 

Monday, July 4, 2011

என் கனவுகளின் கண்களே..!

உயிரிலே ஊஞ்சலாடி உறவாடும் காதலே..
உன் அன்பிலே என்னை கட்டி அணைப்பாயா என்றுமே..?
கனவிலே கண்கள் கட்டி களவாடும் காதலே..
உன் அன்பிலே என் தவறை தட்டி தடுப்பாயா என்றுமே..??
மனதில் மாயமாக தோன்றி மகிழ்விக்கும் காதலே..
உன் பிரிவை உணராமால் உறவு கொள்வாயா என்றுமே??
மின்கம்பிகளில் அமரும் பறவைகள் மின்சாரத்திற்கு பலியாவதில்லை..!
அதே போல.... 
உன் கோபத்தில் என் காதல் அமர்ந்தால்...
அதன் மின்சாரத்திற்கு என்றும் நான் பலியாவதில்லை..!
என் கனவுகளின் கண்களே..!
உன் கண்ணீரை துடைக்க என் கரங்கள் விரைந்திடுமே..!
என் உயிரின் உணர்வுகளே..!
உன் இதயத்தில் இன்பத்தை புதைக்க இடைவேளை இன்றி இன்பம் துறப்பேனே..!  
உன் துணையின்றி "என் உலகம்"  மறந்தேனே..! 
நீ உடனிருந்தால்  இந்த உலகம் அனைத்தும் மறைந்திடுதே ..!