Total Pageviews

Thursday, December 22, 2011

என் உடன்.. என் அவள் !!

என்னுடன் என்னவளிருக்க இனி எங்கவள் என்றெண்ணம் என்னுள் எழுந்திருமோ??
கண்களில் காதல் கலந்திருக்க இனி என் கனவுகளும் கவிதையாகுமோ??
பனித்துளியே நீ என் பக்கமிருக்க ஏக்கமே..
என் நிழலிலே உன் பிம்பம் பிறந்திட பிரியமே..!
தாக்கிடுமே..!
உன் துயரம் என்னை தாக்குதே..!
கொன்றிடுமே..!
உன் மௌனம் என்னை கொள்கிறதே..!
இனி..
உன் புன்னகை என்னுள் ஒலிக்காவிட்டால்.. 
என் மொட்டுகளும் பூக்காமல் வாடிடுமே..!  
நம் கைகோர்த்து கடக்கும் பாதையெங்கும் பதிந்த.. 
நம்  பாதங்கள் புவியிடம் நம் காதலை சொல்லட்டுமே..! 
     

Thursday, December 1, 2011

எனக்கென பிறந்தவள்..!


என் வாழ்வில் இல்லையென்று நினைத்ததெல்லாம்.. 
என் இல்லறம் சேர்த்த என் இன்பமே..!
என் கனவில் கண்டதெல்லாம்.. 
என் கரங்களில் கொடுத்த என் கடவுளே..!
புதைக்கிறேன் உன் பாசத்தை நீ என் உடனிருந்தால்..
பிழைக்கிறேன் இந்த புவியினில் நீ எனக்காக பிறந்ததால்..!
நம் ஒவ்வொரு நொடியும் தயிரம் தந்தாயே..
என் தனிமையை தள்ளி !!
என் ஒவ்வொரு நாடி அசைவிலும் புன்னகை இசைக்குதே.. 
உன் பிறந்தநாளை எண்ணி !!
முழுமதியே..
வந்தாயே துணையென என் நிழலுக்கு.!
நன்றி உரைப்பேன்..
உன்னை எனக்கென ஈன்றெடுத்த உன் அன்னைக்கு !!   
இனி.. 
உன் கண்கள் கண்ணீர் காணாது!!
உன் கனவுகள் வெறும் கானல் நீராகாது!!
என்றும் என் காதல் விலகாது உன்னை விட்டு ..! 
நம் ஊடல் உயிர் கொள்ளாது நம் உணர்வை விட்டு..!
உன்னுடன் என்றும் உலவும் என் காதலின்..
பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!